“4 லட்சம் பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி” – விரைவில் தொடங்கும் Second Phase.!

Second Phase Vaccination
Picture Courtesy KKMalaysia

இதுவரை மலேசியாவில் 4,02,650 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். (Second Phase Vaccination)

மேலும் ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இரண்டாம்கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். (Second Phase Vaccination)

“4519 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது” – ஆதம் பாபா.!

அதிகபட்சமாக சிலாங்கூர் பகுதியியல் 52971 பேருக்கு காரோண தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சபா பகுதியில் 40160 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி சரவாக் மாநிலத்தில் இருந்து தற்போது தொடங்கியுள்ளது.

சரவாக் பகுதியில் இதுவரை 33,788 பேருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தும் 4848 பேருக்கு இரண்டாம் டோஸ் மருந்தும் அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை, அதிக அளவில் ஆபத்தில் உள்ள 9 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

அதன் பிறகு மூன்றாம் மற்றும் இறுதிக்கட்டமாக 18 வயது நிரம்பிய 16 மில்லியன் மக்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை இந்த தடுப்பூசி வழங்கு பணி நடைபெறும்.

தீவிரமாக மலேசியாவில் பரவி வந்த கொரோனா, அதன் மூன்றாம் அலைக்கு பிறகு சற்று குறைவான அளவில் பரவி வருகின்றது.

ஆனால் அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram