“85 உள்ளூர் தொற்று” – Sabah மற்றும் Kedah பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா..?

Malaysia Port
Picture Courtesy Today Online

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று ஒரே நாளில் 100 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது பாதிப்பு எண்ணிக்கையை 9559 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். பல மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் மூன்று இலக்கத்தில் பாதிப்பு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்குள் இருந்து தொற்று மீண்டும் அதிகமாகி உள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : “மலேசியாவில் ஒரே நாளில் 56 உள்ளூர் தொற்று” – பீதியில் ஆழ்ந்த Sabah பகுதி மக்கள்..!

மேலும் நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 9136 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.6 சதவிகிதமாக ஆக உள்ளது.

நேற்று கொரோனா காரணமாக மலேசியாவில் யாரும் மரணிக்காத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 128ஆக உள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 100 பேரில் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் 11 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல மாதங்களுக்கு பிறகு தற்போது மலேசியாவில் 85 என்ற அதிக அளவில் உள்ளூர் தொற்று ஏற்பட்டிருப்பது மக்களை பீதியடைய செய்துள்ளது. LD Fortress என்ற புதிய க்ளஸ்டர் காரணமாக மலேசியாவின் சபா பகுதியில் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. sabah மற்றும் கெடா பகுதியில் தான் தற்போது அதிக அளவிலான உள்ளூர் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அளவிற்கு அதிக தொற்று என்பது சுகாதார துறைக்கு பெரிய சவாலாக அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram