மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – தோல்வியை தழுவிய பி.வி. சிந்து

PV-Sindhu

மலேசிய தலைநகர், கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்கொண்டு போட்டியிட்டார். இந்தத் போட்டி தொடரில் முதல்நிலை வீராங்கனையான யிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறினார்.

இதனால் தாய் சூ யிங் 21-16, 21-16 என நேர்செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். தான் ஆடிய முதல் ரவுண்டில் பல தவறுகளை செய்த பிவி சிந்து ஆட்டத்தை எளிதாக இழந்தார். 2-வது செட்டில் 11-20 என பின்தங்கிய நிலையில் தொடர்ச்சியாக ஐந்து புள்ளிகள் பெற்றார். இருந்தாலும் யிங் ஒரு புள்ளிகள் மட்டுமே பெற வேண்டிய நிலை இருந்ததால் பிவி சிந்துவால் 2-வது செட்டை கைப்பற்ற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த ஜோடி இதற்குமுன் 17 முறை விளையாடியுள்ளது, அதில் ஐந்து முறை மட்டுமே பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.