கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் தங்களுடைய பன்னாட்டு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஆயினும் கடந்த மார்ச் மாதம் வரை சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக சென்று சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து வருகின்றது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் அங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
@hcikl is pleased to share the schedule of #VandeBharatMission flights from #KualaLumpur for the period 18-27 August 2020. Kindly visit @hcikl wesite on https://t.co/cWmEYoTfdV for more details and regular updates. #IndiaFightsCorona@MEAIndia @IndianDiplomacy @FlyWithIX pic.twitter.com/xsxjooo7K6
— India in Malaysia (@hcikl) August 15, 2020
இந்த மாதம் 27ம் தேதி வரையிலான விமான விவரங்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது. மேலும் இந்த இந்தியா செல்லும் விமானங்களில் செல்ல பதிவு செய்துள்ள பயணிகள் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் தங்களது பயணத்தை மேற்கொள்ளமுடியாத நிலையில் தயவு செய்து முன்கூட்டியே அரிக்குமாறும் அப்படி செய்தால் காத்திருக்கும் பயணிகள் தாயகம் திரும்ப வசதியாக இருக்கும் என்று உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகள் பயண நேரத்திற்கு குறைந்தது 5 மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வரவேண்டும் வேண்டும். விமான நிலையத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்யமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter – https://twitter.com/malaysiatms