தியோமான் தீவில் இன்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை பி.கே.பி.டி அமல்படுத்தப்படுவதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார். (PKP Tioman Island)
ஏற்கனவே கே.எல், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மார்ச் 5ம் தேதி தொடங்கி 18ம் தேதி பி.கே.பி. அமல்படுத்தப்பட்டுள்ளது. (PKP Tioman Island)
“கொரோனா தடுப்பூசி” – மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.!
இந்த அறிவிப்பினை பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் சபா மாநிலத்தை தவிர்த்து பிற இடங்களில், மாநிலம் கடந்த பயணத்திற்கு அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல கிளந்தான், சரவாக் மற்றும் கெடா ஆகிய பகுதிகளில் நடப்பில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாக்கா பகுதியிலும் நடமாட்டக்கட்டுப்பாடு கடந்த மார்ச் 5ம் தேதி முதல் அமலாக்கம் பெறுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மலேசியாவில் புதிதாக 1208 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் 1973 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
தற்போது மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்களப்பணியாளர்கள் 5 லட்சம் பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சுமார் 32 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram