வுஹான், உலக மக்கள் தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நகரித்தின் பெயர் என்றால் அது மிகையல்ல.
ஒற்றை தொற்றாக உருவெடுத்த அந்த வைரஸ் இன்று உலக அளவில் பிறவி உள்ளது என்றால் இன்னும் உலகம் விஞ்ஞானத்தின் உச்சத்தை அடையவில்லை என்றே சொல்லலம்.
பலர் இதை வேண்டும் என்றே பரப்பப்பட்ட நோய் என்றும் கூறிவருகின்றனர். சிலர் 100 வருடங்களுக்கு ஒரு முறை பூமி தன்னை சுத்தம் செய்ய இயற்கை எடுத்த நடவடிக்கை என்று கூறுகின்றனர்.
ஆனால் ஆதாரம் இல்லாமல் இந்த பூவுலம் நம்பாது என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க : “பின்னாங் பகுதியில் மலேசியா தின கொண்டாட்டங்கள் நடைபெறாது” – மாநில அரசு தகவல்..!
பல கோடி மக்களை வடிவத்தைக்கும் இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் 6 மாத பூட்டுதலுக்கு பிறகு மக்கள் வாழ வழியின்றி தற்காப்புடன் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
மலேஷியா மற்றும் இன்றி அண்டை நாடான இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான இந்தியாவின் வந்தே பாரத் திட்டம் தொடங்கி செயல்பட்டு வருகின்றனது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி 6 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழகத்தை நோக்கி ஏர் ஆசியா தனது பணயத்தை தொடங்கியது.
மேலும் இந்த பயணம் குறித்து அடுத்து வர இருக்கும் பயணம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிருவனம், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தகவலக்கை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலேசியாவில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள குடிநுழைவு மையங்களில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களை டெல்லி மற்றும் திருச்சிக்கு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
? Telegram