கோலாலம்பூர் – திருச்சி : மூன்று நாட்கள் மூன்று விமானங்கள்.!

Trichy to Kuala Lampur
Image tweeted by Air India Express

பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களில் மூன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பறக்கவிருக்கிறது. (Malaysia Trichy Flights)

கடந்த ஆண்டை போல இந்த 2021ம் ஆண்டும் கோலாலம்பூர் மற்றும் திருச்சி மார்கமாக பல விமானங்களை இயக்கி வருகின்றது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Malaysia Trichy Flights)

“கொரோனா தடுப்பூசி” – நாளை மலேசியா வந்தடையும்.!

இந்நிலையில் மலேசியா முதல் திருச்சி வரையிலான பிப்ரவரி மாத விமான சேவை முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் ஆரம்பித்தது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது.

இருமுனை பயணமாக விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் பல பயணிகள் திருச்சி, சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்றடைந்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் தொடங்கி 8 மாதங்களாக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

அதே சமயம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மலேசியாவிற்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிப்ரவரி 22, 23 மற்றும் 24 என்று தொடர்ந்து மூன்று நாட்கள் மூன்று விமானங்கள் மலேசியா முதல் திருச்சி வரை இயக்கப்படவுள்ளது.

மேலும் சென்னைக்கு பிப்ரவரி 25ம் தேதி இந்த மாதத்திற்கான இறுதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோலாலம்பூரில் இருந்து செயல்பட உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram