“பெரும் இழப்பை சந்திக்கும் சுற்றுலாத்துறை ஊழியர்கள்” – முன்னாள் உதவி தலைவர்.!

Malaysia Tourism
Image tweeted by Tourism Malaysia

மலேசியாவில் தற்போது சுமார் 35 லட்சம் பணியாளர்கள் சுற்றுலாத்துறையில் வேலைசெய்து வருவது குறிப்பிடத்தக்கது. (Malaysia Tourism)

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அதில் ஒரு பகுதி பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். Malaysia Tourism

“Johor Bahru பகுதியில் பள்ளிகள் மூடல்”

இந்த தகவலை மலேசியவின் தேசிய சுற்றுலா மன்றத்தின் முன்னாள் உதவித் தலைவர் எரிக் ஆர். சின்னையா ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் முடிவுக்கு வர இருந்த நிலையில் அந்த கட்டுப்பாடு இவ்வாண்டு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது உலகில் லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைத்து வருகின்றது கொரோனா. அதே சமயம் நியூஸிலாந்து போன்ற சில நாடுகள் கொரோனா பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மீட்சிக்கான இந்த கட்டுப்பாட்டில் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உறுதியாக அண்மையில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பினால் மலேசியாவில் முழுவதும் சுற்றுலாவும் அதை நம்பியுள்ள மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி இதுவரை சுற்றுலாத் துறையை சேர்ந்த சுமார் 20 விழுக்காடு பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாக சின்னையா தெரிவித்துள்ளார்.

இந்த நிலை நீடித்தால் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா தாக்கத்தால் சுற்றுலாத் துறை மீண்டு வருவது கடினமாகியுள்ளது என்றார் அவர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram