“தமிழகத்தை முந்தும் மலேசியா.?” – தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.

Malaysia Covid 19 Virus
Image tweeted by Nor Hisham Abdullah

கடந்த சில நாட்களாக மலேசியாவில் தினமும் 1000-க்கும் அதிகமான அளவில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். (Malaysia Covid 19 Virus)

தற்போது ஆசிய நாடுகளில் ஓரளவு கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இருப்பினும் இன்னும் முழுமையாக கொரோனா முடிவடையவில்லை என்பதே நிதர்சனம். (Malaysia Covid 19 Virus)

“விமான எண் 1625” – கோலாலம்பூர் முதல் திருச்சிக்கு பறந்த 171 பயணிகள்.!

இந்நிலையில் 8 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் தமிழகத்தை விட கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றது மலேசியா.

தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை மட்டுமே கொண்டது மலேசியா என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் 1370 பேருக்கு மலேசியாவில் கொரோனா உறுதியாகியுள்ளது.

தற்போது மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அமலில் உள்ளது. நேற்று கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஒரு உச்சம் தொட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவானது. ஆனால் நேற்று ஒரே நாள் 1300-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 1370 பேரில் 532 பேர் தலைநகர் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் 283 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1370 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 84846 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1204 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 70597 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 419 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram