“தொடர்ந்து உயரும் தொற்று” – Sabah-விற்கு அரசு விரைந்து உதவ வேண்டும்..!

Malaysia Covid 19
Image tweeted by KKMalaysia

இதுவரை இல்லாத அளவில் அண்மைக்காலமாக மலேசியாவில் தொற்றின் (Malaysia Covid 19) எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக Sabah பகுதியிக் தொற்றின் அளவு தினமும் அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் (Malaysia Covid 19) Sabah பகுதியில் 673 பேர் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் உள்ளூர் தொற்று 862 என்ற அளவை எட்டியுள்ளது. சபா (Sabah) பகுதியில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

மலேசியா தற்போது கொரோனா பரவளில் மூன்றாம் அலையில் உள்ளதை நினைவுப்படுத்தி மக்களை SOP-க்களை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தியது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “ஆலயங்களுக்கு செல்ல 6 பேருக்கு மட்டுமே அனுமதி” – இந்து சங்கத்தின் தேசிய தலைவர்.!

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் விதிக்கப்பட்ட பொது நடமாட்டக் கட்டுப்பட்டால் வணிகம், போக்குவரத்துக்கு போன்ற பல விஷங்களை நம்பியே வாழ்க்கையை நகர்த்தும் மக்களுக்கு அது பெரும் இடியாக உள்ளது என்றால் அது மிகையல்ல.

இதுவரை மலேசியாவில் 193 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நேற்று ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sabah பகுதியில் அதிக அளவு தொற்று உள்ளதை மனதில் கொண்டு அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram