“ஒரே நாளில் 927 பேருக்கு பரவிய கொரோனா” – பீதியில் சபா பகுதி மக்கள்..!

Malaysia Corona
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் (Malaysia Corona) மோசமான முறையில் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் 1240 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

அதிலும் குறிப்பாக சபா பகுதியில் தான் தொற்றின் அளவு அதிகம் உள்ளது. (Malaysia Corona) நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 1238 பேரில் 927 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “மோனோ ரயில் மற்றும் ராபிட் பேருந்துகள்” – இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதி.!

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1238 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய இருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 27805 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

அதே சமயம் நேற்று ஒரே நாளில் 691 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 17825 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது. மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 7 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 236 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram