பரவி வரும் தொற்று காரணமாக பல தொழில்கள் முடக்கமடைந்து வருகின்றது. இந்நிலையில் மறுசீரமைப்பு திட்டத்திற்கு குத்தகைதாரர்கள் இணக்கம் தெரிவிக்காத நிலை தொடர்ந்தால் (Malaysia Airlines) மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. இஸாம் இஸ்மாயில் அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்.
Firefly, MASwings, MASkargo உள்ளிட்ட 19 துணை நிறுவனகளை கொண்டது தான் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம். ஏர்லைன்ஸ் தளத்தில் உலக அளவில் புகழ் பெற்ற நிறுவனம் இது என்றால் அது மிகையல்ல.
தற்போது பரவி வரும் இந்த தொற்று நோயின் காரணமாக பல தொழில்கள் முடக்கமடைந்து வரும் நிலையில் விமான சேவை நிறுவனங்களும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றது.
இதையும் படிங்க : “புதுப்பொலிவு பெறும் திருச்சி விமான நிலையம்” – அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட AAI..!
முன்னறிவிப்பு இன்றி பல முன்னணி விமான நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை நீக்கியது அனைவரும் அறிந்த ஒன்றே.
விமான ஓட்டிகள் உள்பட சில பணியாளர்கள் வேலை இழந்த வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட அவலமும் அண்மையில் அரங்கேறியது.
இந்நிலையில் தங்களுடைய நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சில குத்தகைதாரர்கள் சம்மதிக்கவில்லை என்று மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் தங்களுடைய மறுசீரமைப்பு பணிக்கு சில குத்தகைதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், சிலர் அதுகுறித்து முடிவெடுத்து வருவதாகவும் Malaysia Airlines நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பல நிறுவனங்கள் பாதிப்படைந்து அதில் பணிபுரியும் பணியாளர்களும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram