லங்காவி : சூடுபிடிக்கும் உள்நாட்டுச் சுற்றுலா..!! – முன்பதிவாகும் ஹோட்டல் அறைகள்.

Langkawi

கொரோனா காரணமாக பல நாடுகளில் பல தொழில்துறையில் முடங்கியுள்ளது பலரும் அறிந்த விஷயம். குறிப்பாக இயற்கை சூழலில் அமைந்துள்ள மலேசியாவில் சுற்றுலா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாக ஹோட்டல் தொழிலார்கள் சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழும் மக்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் RMCO எனப்படும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு மலேசியாவில் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் மலேசியாவின் லங்காவியில் உள்ள ஹோட்டல்களில் சுமார் 800-க்கும் அதிகமான அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் புத்துயிர் பெரும் உள்நாட்டு சுற்றுலாவால் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாவை நம்பி வாழும் மக்கள் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டின் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 10 லட்சம் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.