10 சதவிகித வெளிநாட்டு ஊழியர்களை நீக்க முடிவு..? – பிரபல எஃப்.ஜி.வி நிறுவனம்..!

Foreign Workers
Picture Courtesy Free Malaysia Today

நம்மில் பலர் Plague, Spanish Flu போன்று உலகையே அச்சுறுத்திய பல நோய்களை குறித்து நமது வரலாற்று பாட புத்தகத்தில் படித்திருபோம். ஒரு ஆய்வின்படி இது வரை மனிதகுலத்தை கொரோனா போன்ற கொடிய நோய்கள் 20-க்கும் அதிகமான முறை தாக்கியுள்ளதாக கூறுகிறது. சிலர் ஒவ்வொரு 100 வருடத்திற்கு இது போன்ற பேரழிவு ஏற்பட்டு வருகின்றது என்று கூறி வருகின்றனர். எது எப்படியோ இக்கால மனிதகுலம் கண்ட ஒரு மாபெரும் தொற்று நோய் தான் இந்த கொரோனா என்றால் அது மிகையல்ல.

இதையும் படிங்க : “கட்டுமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்” – பொதுப்பணித் துறை அமைச்சர்

இந்த நோயின் காரணமாக பல்லாயிரம் உயிர்கள் பறிபோகியுள்ள நிலையில் தற்போது உலக அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. மலேசியா மாற்றம் இல்லாமல் உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை அதிரடி வேலைநீக்கம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. விமான நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மென்பொருள் நிறுவங்கள், செய்தி நிறுவனங்கள் என்று பல நிறுவனங்கள் இந்த நோய் தொற்றால் ஏற்பட்ட சரிவை சமாளிக்க ஆட்குறைப்பு செய்து வருவது அனைவரும் அறிந்த உண்மை.

இந்நிலையில் மலேசியாவை தலமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் “FGV Holdings Berhad” நிறுவனம் தற்போது தங்களிடம் உள்ள 10 சதவிகித வெளிநாட்டு பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய விவசாயம் மற்றும் அது சார்த்த பொருட்கள் சம்மந்தமான வேலைகளை கொண்ட நிறுவனத்தில் சுமார் 32,000 வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் அதில் 10 சதவிகித ஊழியர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms