“வந்தே பாரத் – கோலாலம்பூர் முதல் இந்தியா வரை” – விரைந்து நடக்கும் முன்பதிவு..!

Kuala Lampur to India
Image tweeted by Air India Express

அண்டை நாடான இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுவது தான் (Kuala Lampur to India) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். இந்த கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும்.

பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. (Kuala Lampur to India)

“பாதுகாப்புடன் மாறுபட்ட தீபாவளியை கொண்டாடுவோம்”

பல லட்சம் மக்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் Air India Express நிறுவனம் கோலாலம்பூர் செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பினை அண்மையில் வெளியிட்டது. அந்த நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது “புறப்படும்-சேருமிடங்களுக்கு” இடையில் சேவை வழங்கும் “Point To Point” வகை சேவை அளித்துவரும் நிறுவனமாகும். சேருமிடத்திலிருந்து இணைப்பு விமானசேவைக்கு இது பொறுப்பாகாது.

முன்பு கோலாலம்பூர் வழியாக ஹாங்காங், தைவான் உள்பட மலேசிய அரசு அனுமதித்த குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு.

நிபந்தனைகளுடன் கூடிய தனியான உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருந்தவர்களுக்கு பயணம் செய்ய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனுமதித்தது.

ஆனால் இப்போது கோலாலம்பூர் வழியான எந்தவொரு இணைப்பு விமானசேவைக்கும் அனுமதி இல்லை.

எனவே கோலாலம்பூர் வழியாக பிற இடங்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் COVID தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக எங்களுடன் முன்பதிவு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். (Kuala Lampur to India)

நேரடியாக ஒரு இடத்தில் இருந்து கோலாலம்பூருக்கு செல்வோர் மட்டுமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் பதிவு செய்யலாம் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் கோலாலம்பூரில் இருந்து இந்தியா செல்வதற்கான அப்டேட் செய்யப்பட்ட பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.

அந்த விமானங்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram