மலேசியாவிகள் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகின்றது. (Kuala Lampur Covid 19)
பல நாட்கள் கழித்து நேற்று மீண்டும் தலைநகரில் அதிக அளவில் தொற்று காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Kuala Lampur Covid 19)
“என் மீது முதல் பரிசோதனை நடக்கும்” – பிரதமர் முஹிதீன் யாசின்.
அதே போல சிலாங்கூர் பகுதி தொற்று எண்ணைக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிலாங்கூர் பகுதியில் 710 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோஹோர் பகுதியில் 412 பேர், சபா பகுதியில் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜோஹோர், பின்னாங், மலாக்கா ஆகிய பகுதிகளை தவிர பிற இடங்களில் தொற்றின் அளவு குறைவாகவே உள்ளது.
மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 2335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 103900 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மட்டும் 874 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 83414 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Selangor Coronavirus)
இன்று மலேசியாவில் இருவர் கொரோனா காரணமாக இறந்துள்ள நிலையில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்னிக்கை 451ஆக உயர்ந்துள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram