மலேசியாவில் வெகு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கையில் சபா முதலிடம் வகித்தது. இந்நிலையில் நேற்று சபா-வை பின்னுக்கு தள்ளியுள்ளது தலைநகர் கோலாலம்பூர். (Kuala Lampur Corona)
மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.
“கல்வி நிறுவனங்களை திறக்க முயற்சிக்க வேண்டும்”
இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 1208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 47417 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மட்டும் 1013 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 34785 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பிய 3 பேர் உள்பட மலேசியா திரும்பிய 6 பேருக்கு நேற்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.(Kuala Lampur Corona)
Kenyataan Akhbar KPK 15 November 2020 – Situasi Semasa Jangkitan Penyakit Coronavirus 2019 (COVID-19) di Malaysia https://t.co/UyMJykNmwT
— Noor Hisham Abdullah (@DGHisham) November 15, 2020
மேலும் இந்த நோயின் காரணமாக நேற்று மூன்று பேர் மலேசியாவில் இறந்துள்ள நிலையில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்னிக்கை 309ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா, நேபால் மற்றும் இந்தோனேஷியா ஆகிய பகுதிகளில் இருந்து மலேசியா வரும் மக்களால் இங்கு தொற்றின் அளவு சற்று உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து கெடா, சிலாங்கூர், ஜோஹோர், சரவாக் மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளிலும் சில தொற்று சம்பவங்கள் காணப்பட்டு வருகின்றது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram