நாளை 4 ஜனவரி 2021 முதல் திருச்சி மற்றும் தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கான வந்தே பாரத் விமான சேவை தொடங்கவுள்ளது. (KL TN Flights 2021)
மேலும் ஹைதெராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும் விமானங்கள் மலேசியாவில் இருந்து இயக்கப்படவுள்ளது. (KL TN Flights 2021)
“தொடர்ந்து 2000ஐ தாண்டும் தொற்று எண்ணிக்கை” – சிவப்பு மண்டலமாகும் பகுதிகள்.!
அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை பன்னாட்டு விமான சேவை, இந்த மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து தடையிலேயே இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதனால் பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக மலேசியாவில் இருந்து மக்கள் பயணிக்க வந்தே பாரத் மூலம் செயல்படும் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் கோலாலம்பூர் முதல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை அண்மையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 04 2021 தொடங்கி ஜனவரி 25 2021 வரை அனைத்து திங்கள் மற்றும் இரண்டு புதன்கிழமைகளில் திருச்சிக்கு விமான சேவை அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனவரி 7ம் தேதி 2021 தொடங்கி 28 ஜனவரி 2021 வரை அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் விமான சேவை சென்னைக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram