“மேலும் ஒரு கோவிலை இடிக்க முடிவு.?” – கெடா அரசுக்கு பி.இராமசாமி கண்டனம்.!

Land for Hindu Temple
Photo Courtesy Tamil malar

மலேசியாவில் கொரோனா காலகட்டத்தில் ஏற்கனவே இரண்டு ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக ஒரு கோவிலை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. (Kedah Hindu Temple)

அலோர் ஸ்டாரில் உள்ள பழமையான கோவில் ஒன்றும் அதனை தொடர்ந்து கூலிமில் ஓர் கோவிலையும் கடந்த ஆண்டில் கெடா அரசு உடைத்து. (Kedah Hindu Temple)

“லங்காவி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாக மாறியது”

மேலும் குறிப்பாக அரசு அல்லது தனியார் நிலங்களில் உள்ள கோவில்களை இடிக்கவே அரசு முனைப்பு கட்டிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிகழ்விற்காக தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் பேராசிரியர் திரு, டாக்டர் பி.இராமசாமி அவர்கள்.

ஆனால் கெடா அரசு எப்போது இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்று பெசாரின் இந்தியர்கள் பிரிவு அதிகாரியான குமரேசன் முன்பு தெரிவித்தார்.

ஹிந்து ஆலயங்கள் தொடர்பாக எழும் விவகாரங்களை தங்களுடைய பார்வைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கியது கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட இயக்க கட்டுப்பட்டு இன்றோடு ஓர் ஆண்டை கடந்துள்ளது.

மலேசியாவில் பெருமளவில் தொற்று பரவலை தடுக்க இது மிகவும் உறுதுணையாக இருந்தது என்று பல அறிஞர்கள் கூறினார்கள்.

மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஹிந்து கோவில்கள் தொடர்பாக எந்த சச்சரவுகள் இருந்தாலும் எங்கள் பார்வைக்கு கொண்டுவருங்கள்.

எங்கள் பார்வைக்கு கொண்டுவராமலே அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனியார் நிலங்களிலும் வீடுகளின் முன்புறத்திலும் வழிபாட்டு தளங்கள் (கோயில்கள்) அல்லது சாமி மேடைகளை அமைப்பது தொடர்பாக வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை காண எங்கள் உதவியை நாடுங்கள் என்றார் அவர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram