“கடற்பாலத்தை கடக்க உதவும் நடைபாதை” – மலேசிய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் ஜோகூர் அரசு.!

Johor and Singapore
Image Courtesy The Star

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு பரவி வரும் நோய் தொற்று காரணமாக பல நாட்களாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பணியாளர்கள் 7 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 14 நாட்கள் என்ற அளவில் இருந்த இந்த தனிப்படுத்துதல் தற்போது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “தொடர்ந்து உயரும் உள்ளூர் தொற்று” – மலேசியா திரும்பிய 8 இந்தியர்களுக்கு உறுதியான Covid 19..!

மேலும் தற்போது குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் கைருஸ் டாவுட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான எல்லை கடந்த பயணத்திற்கு மக்கள் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் மற்றும் தொழில்சர்ந்த பயணங்களுக்கு மக்கள் RGL பயண முறையை பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார். RGL matrum PCA மூலமாக பயம் செய்ய விரும்பும் மக்கள் MTP எனப்படும் My Travel Pass தளத்தில் http://www.mtp.imi.gov.my பதிவு செய்யலாம்.

இந்நிலையில் இருநாட்டிற்கும் இடையில் உள்ள 1 கிலோமீட்டர் கடல்பாலத்தை இரு நாடு மக்களும் நடந்து கடக்க நடைபாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய நிதியை மலேசிய அரசு அளிக்கும் என்று ஜோகூர் அரசு காத்துள்ளது. இந்த நடைபாதை கட்டப்பட்டால் பலர் இதனால் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram