‘தனிமைப்படுத்துதலுக்கு 4700 ரிங்கிட் செலவாகும்’ – மலேசியர்களுக்கு 56 சதவிகிதம் சலுகை..!!

ismayil sabari yakob
Image tweeted by Ismail Sabri Yakob

தற்போது உலகமே ஒரு இக்கட்டான சூழலில் சிக்கித்தவித்து வரும் வேளையில் மலேசிய அரசு அனுதினம் மலேசியாவில் பல புதிய சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மலேசியாவிற்குள் நுழையும் அனைவருமே கட்டாய தனிமைப்படுத்துதலுக்கான செலவைச் ஏற்க வேண்டியிருக்கும் என்றும், மேலும் அவர்கள் ஒப்புதல் கடிதம் ஒன்றிலும் கையெழுத்திட வேண்டும் என்றும் பாதுக்காப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அண்மையில் கூறியிருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூலை 21ம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு புதிய தகவலை தெரிவித்தார். இதுவரை பிறநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் தொற்று இல்லாதபட்சத்தில் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அணுமதிக்கப்பட்ட நிலையில் பலர் அதை மீறுவதாகவும் ஆகையால் இனி நாடு திரும்புவோர்கள் அரசு அனுமதிக்கும் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதற்கான கட்டணத்தினையும் அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை கடந்த ஜூலை 24 2020 முதல் அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சர் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பும் வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் அரசு அறிவிக்கும் நிலையங்களில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் நேரத்தில் அதற்கு கட்டணமாக 4700 ரிங்கிட் வரை செலுத்த நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாயகம் திரும்பும் மலேசியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் கட்டணமாக 2100 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் மலேசியர்களுக்கு 56 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms