மலேசியா : ‘தப்பியோடிய கொரோனா பாதித்த தம்பதி’ – மீண்டும் கண்டுபிடிப்பு..!!

corona

மலேசியாவில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும் தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு தொற்று இல்லாமல் இருந்தால் தான் மலேசிய கொரோனா இல்லாத நாடக அறிவிக்கப்படு என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரிசோதை முழுவீச்சில் நடந்து வருகின்றது.

இந்நிலையில் மலேசியாவின் Jalan Matang baru பகுதியில் கொரோனா குறித்த சோதனை நடத்தப்பட்டது. இதில் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அந்த தம்பதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் அந்த இடத்தில் இருந்து தப்பியோடி உள்ளனர் அந்த தம்பதியினர்.

அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில் சிறுது நேரத்தில் அவர்கள் இருவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சரவாக்கில் பணிக்கான பெர்மிட் குறித்து விண்ணப்பித்தபோது கட்டாய கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.