முதல் முறையாக 300ஐ தாண்டிய தொற்று எண்ணிக்கை – பீதியில் மூழ்கிய Sabah மற்றும் Kedah பகுதி..!

Malaysia Covid
Image tweeted by Noor Hisham Abdullah

கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மலேசியாவில் 137 பேர் கொரோனா காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக வெளியாகும் செய்திகள் பல மாத கடின உழைப்பை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது என்பது வேதனை அளிப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மலேசியாவில் ஊரண்டங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள் என்று பலர் தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து இந்த மருந்து கண்டறியப்படாத நோயை எதிர்த்து போராடி வருகின்றனர்.

இதையும் படிங்க : “அதிகரிக்கும் தொற்று – Sabah பகுதியில் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய தடை”

மலேசியாவில் சில மாதங்களுக்கு முன்பு (தீவிர கட்டுப்பாடு அமலில் இருந்த நேரத்தில்) தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தொற்றே இல்லாத அளவில் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இல்லாத அளவில் தொற்றின் அளவு விண்ணை தொடுகின்றது என்றால் அது மிகையல்ல.

நேற்று ஓரே நாளில் உள்ளுர் தொற்று 317 என்ற மிகப்பெரிய அளவை எட்டியுள்ளது. Sabah பகுதியில் 155 பேர், Kedah பகுதியில் 102 பேர், சிலாங்குர் பகுதியில் 32 பேர் என்று தொடர்ந்து பல இடங்களில் தொற்று உருவாகி வருகின்றது. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தும் இந்த அளவுக்கு தொற்று பரவியுள்ளது வேதனை அளிக்கின்றது.

Sabah பகுதியில் மீண்டும் தற்போது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாடு முழுவது மீண்டும் ஊரடங்கு பிறப்பித்தான் அது மலேசிய பொருளாதாரத்திற்கு சவாலாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram