நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் திருச்சி மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளுக்கு 340 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்றனர். (Delhi Trichy Flights)
இந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருச்சி – கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் – திருச்சி மார்கமாக பல விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Delhi Trichy Flights)
“மலேசியாவில் அவரச நிலை பிரகடனம்” – மாமன்னர் அறிவிப்பு.!
இந்நிலையில் மலேசியா முதல் திருச்சி வரையிலான ஜனவரி மாத விமான சேவை முன்பதிவை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அண்மையில் தொடங்கியது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது.
இருமுனை பயணமாக விமானங்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் 340 பயணிகள் திருச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
கடந்த மே மாதம் தொடங்கி 8 மாதங்களாக வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
அதே சமயம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மலேசியாவிற்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Around 340 Indian nationals assisted by @hcikl officials in returning to the motherland 🇮🇳 by #VandeBharatMission ✈ @FlyWithIX 1121 to Delhi and 1625 to Trichy on 12 Jan'21. @MEAIndia @PIB_India @pibchennai @IndianDiplomacy pic.twitter.com/vCXZrEjMkJ
— India in Malaysia (@hcikl) January 12, 2021
நேற்று ஜனவரி 13ம் தேதி 340 பயணிகள் கோலாலம்பூரில் இருந்து தூதரக அதிகாரிகளின் உதையுடன் தாயகம் புறப்பட்டனர்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram