“ஒரே நாளில் 1428 பேருக்கு பரவிய தொற்று” – பீதியில் தலைநகரம்..?

Covid 19 KL Update
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அமலில் உள்ளது. நேற்று கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஒரு உச்சம் தொட்டுள்ளது. (Covid 19 KL Update)

கடந்த சில வாரங்களாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவானது. ஆனால் நேற்று ஒரே நாள் 2000-க்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். (Covid 19 KL Update)

“கோலாலம்பூர் to தமிழ்நாடு மற்றும் டெல்லி” – நேற்று வந்திறங்கிய 358 பயணிகள்.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 2229 பேரில் 1428 பேர் தலைநகர் கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் 274 பேர் சபா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 2229 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஐந்து பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 78499 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1112 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 64056 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஆரம்ப நிலையில் மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தொற்று காணப்பட்டது. இந்நிலையில் கெடா பகுதியில் தற்போது தொற்றின் அளவு குறைந்துள்ளது.

மேலும் மக்கள் SOP-க்களை முறையாக கடைபிடிப்பது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பலரின் கருத்து.

நேற்று மட்டும் மலேசியாவில் 3 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 396 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram