COVID – 19 : கொரோனா காரணமாக மலேசியாவில் இதுவரை 103 பேர் பலி

coronavirus malaysia

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய இந்த தொற்று தற்போது உலக அளவில் பரவி உள்ளது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்னிக்கை சுமார் 3 லட்சத்தை தாடியுள்ளது. இதுவரை உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக இறந்துள்ளனர். இந்நிலையில் www.worldometers.info என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உலக எ;அளவில் சுமார் 10,086,865 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 69 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6071 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மட்டும் 39 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 4210 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 69.3 ஆக உயர்த்தி உள்ளது.

மேலும் கொரோனா காரணமாக நேற்று ஒருவர் இறந்த நிலையில் மலேசியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 103 ஐ எட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.