“புதிய உச்சத்தில் கொரோனா” – சிலாங்கூரில் அதிகரிக்கும் தொற்று.!

Corona Malaysia 2021
Image Tweeted by Noor Hisham Abdullah

இன்று புதிய உச்சமாக மலேசியாவில் 3309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (Corona Malaysia 2021)

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் மோசமான முறையில் பரவி வருகின்றது. (Corona Malaysia 2021)

இதனால் மலேசியாவின் பல இடங்களில் நடமாடக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

“தலைநகர் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் லாக் டவுன்” – மலேசிய பிரதமர்.!

இன்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 3303 பேரில் 1007 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 442 பேர் ஜோஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 3303 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஆறு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 1,41,533 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1469 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 1,10,584 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் மலேசியாவில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 559 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram