மலேசியாவில் கொரோனா : ஒரே நாளில் 80-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தகவல்

malaysia recovered

கொரோனா அச்சம் காரணமாக உலகமே ஸ்தம்பித்து உள்ள நிலையில் மலேசியாவிலும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்து உள்ளது. அன்றாட வருமானத்தை நம்பி வாழும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதுவரை மலேசியாவில் இந்த கொரோனா பாதிப்பால் 35-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்த விஷயத்தில் எப்படி செயல்படுவது என்பது தெரியாமல் பல நாட்டு அரசாங்கங்கள் தவித்து வருகின்றன. இந்நிலையில் மலேஷியா மக்களையும் அரசையும் சற்று ஆறுதல்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், நேற்று ஒரே நாளில் மட்டும் 80-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பினை மலேசியா சுகாதாரத்துறை அமைச்சர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுவரை மலேசியாவில் சுமார் 479 பேர் இந்த கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

அனுதினம் தங்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் உழைக்கும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கு இது நிச்சயம் உத்வேகம் அளிக்கும் செய்தியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.