ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் – விரைவில் கோலாலம்பூரில் தொடக்கம்

joshna

இந்தியாவில் டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டிகளில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் விளையாட, இந்திய அணியில் சவுரவ் கோசால், ஜோஷ்னா உள்ளிட்டோர் தேர்வாகியுள்ளார். பல ஆசிய அணிகளுக்கு இடையே நடக்கும் இந்த ஆசிய ஸ்குவாஷ் போட்டிகளின் 20வது சீசன் தற்போது வருகின்ற மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்கள் பிரிவில், உலகத்தரவரிசையில், 13வது இடத்தில் இருக்கும் சவுரவ் கோசால் இடம்பிடித்துள்ளார். இவர், தேசிய சாம்பியன்ஷிப்பில் 13 முறை வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த போட்டிகளின் பெண்கள் பிரிவில், 18 முறை தேசிய சாம்பியன்ஷிப்பில் கோப்பை தனது வசப்படுத்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இந்த போட்டிகளில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இவருடன் தன்வி, சுனய்னா உள்ளிட்டோர் இப்போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு கிடைத்துள்ளது. அணி விவரம்: சவரவ் கோசால், அபிஷேக் பிரதான், ஹரிந்தர் பால் சிங், அபே சிங். ஜோஷ்னா சின்னப்பா, தன்வி, சுனய்னா, சன்யா வாட்ஸ்.