COVID – 19 : கொரோனா பாதித்த 60.7 சதவிகிதம் மக்கள் பூரண குணம் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor hisham abdulla

கொரோனா தாக்கத்திற்கு பிறகு மலேசியாவில் கடந்த சில வாரங்களாக இந்த நோயின் தாக்கம் சற்று தளர்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 20ம் தேதி வெளியான அறிக்கையின்படி மலேசியாவில் 36 பேர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தொற்று பரவ தொடங்கி நாளில் இருந்து பதிவான அளவில் இதுவே மிகக் குறைந்த அளவும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதே போல ‘மலேசியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சுமார் 98 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 3295 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும், இந்த நிகழ்வு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குனர் ஜெனரல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 60.7 சதவிகித மக்கள் மலேசியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த மகிழ்ச்சியான செய்தியாக நேற்று யாருமே மலேசியாவில் கொரோனா காரணமாக இறக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5425 என்பது குறிப்பிடத்தக்கது.