உலக அளவில் பலரை கொன்று குவித்து வரும் இந்த கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி தற்போது மலேசியாவும் பல உயிர்களை பலிகொடுத்து வருகின்றது.
நேற்று ஒரே நாளில் 6 பேர் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.
குறிப்பாக Sabah பகுதியில் தான் தொற்றின் அளவும் இறப்பின் விகிதமும் அதிகமாக உள்ளது.
ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொடிய நோயில் இருந்து மெல்ல மெல்ல மலேஷியா மீண்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் தொற்றின் வேகம் என்பது அதிகரித்துள்ளது.
நேற்றைய பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 352 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய இருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய இருவரில் ஒருவர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 14722 என்ற அளவை தொட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 188 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 10707 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மலேசியாவில் Sabah மற்றும் Kedah பகுதியில் தான் அதிக அளவில் தற்போது தொற்று காணப்படுகிறது.
இதையும் படிங்க : “கொரோனா காலத்தில் உதவும் ஹெர்பல் முகக்கவசம்” – கண்டுபிடித்து அசத்திய தமிழ் பள்ளி மாணவர்கள்.!
சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தற்போது மீண்டும் அதிகரித்து வரும் இது கொரோனா தொற்றை எதிர்த்து நாம் அனைவரும் போரிட வேண்டும்.
ஆனால் இந்த போர் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாகாது. மக்கள் தேவை இன்றி வெளியில் செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மேலும் அத்யாவசிய வேலைக்காக வெளியில் செல்வோர் SOP-க்களை மிக கவனமாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Terdapat 68 kes positif COVID-19 dirawat di ICU & 25 kes memerlukan bantuan pernafasan.
Terdapat pertambahan 6 kes kematian berkaitan COVID-19. Justeru, jumlah kematian adalah 152 kes (1.03%) Kesemua kes yg adalah dari negeri Sabah, di mana 3 daripada mereka adalah warga emas. pic.twitter.com/YSQavGXguK
— Noor Hisham Abdullah (@DGHisham) October 9, 2020
இந்த நோயை எதிர்த்து போராடும் அனைத்து போராளிகளும் நமது ஒற்றை எதிரியான இந்த கோவிட் 19ஐ எதிர்த்து போராடுவோம் என்றும் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு மலேசியாவில் இயக்கக்கட்டுப்பாடு இருக்காது என்றபோதும் அது பொருளாதார சரிவை சரிசெய்யவே அன்றி மக்கள் தேவை இன்றி நடமாட அல்ல என்று மூத்த அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
* Telegram