‘வந்தே பாரத் திட்டம் – Phase 4’ – கோலாலம்பூரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு பயணித்த 177 இந்தியர்கள்..!!

malaysia immigration
Image Tweeted by India In Malaysia

தற்போது உலக முழுக்க நிலவும் இக்கட்டான சூழல் காரணமாக தாயகம் செல்லமுடியாமல் தவித்து வரும் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து சென்று கொண்டிருக்கிறது இந்திய அரசு. இந்நிலையில் ஏற்கனவே சில விமானங்களில் 300-க்கும் அதிகமான இந்தியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் கொச்சி மற்றும் திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (வந்தே பாரத் – 4) (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை 3.45 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு IX 1221 என்ற விமானம் 177 இந்தியர்களுடன் புறப்பட்டது. விமான தகவல்கள் குறித்து தொடர்ந்து இந்திய High கமிஷன் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் அளித்து வருகின்றது.