வந்தே பாரத் : தடுப்புக்காவலில் இருந்த 14 இந்தியர்கள் – சிறப்பு விமானம் மூலம் திருச்சி சென்றனர்..!

KL to Trichy Flight
Image Tweeted by India in Malaysia

கோவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் தங்களுடைய பன்னாட்டு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளது. ஆயினும் கடந்த மார்ச் மாதம் வரை சொந்த நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக சென்று சிக்கியுள்ள மக்களை மீட்க எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : “போதைப்பொருள் கடத்தல்” : மலேசிய பெண்ணுக்கு வியட்நாம் அரசு விதித்த மரண தண்டனை..?

மலேசிய அரசு கடந்த சில மாதங்களாக பிற நாடுகளில் உள்ள மலேசியர்களையும் நிரந்திர குடியுரிமை பெற்ற மக்களையும் தாயகம் திரும்ப வழிசெய்து வருகின்றது. இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை ‘வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து செல்கிறது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் இங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 18ம் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த வந்த பாரத் திட்டத்தின் மூலம் மலேசியாவின் பல்வேறு இடங்களில் தடுப்புக்காவலில் இருந்து 14 இந்தியர்கள் தற்போது மலேசிய அரசு மற்றும் இந்திய அரசின் உதவியுடன் திருச்சி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல செப்டம்பர் மாதத்திற்கான விமான அட்டவணை வெளியாகி உள்ள நிலையில் மலேசியாவில் இருந்து இந்தியா (செப்டம்பர் மாதம்) செல்லும் விமானங்களின் படியில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms