மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 17 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9334 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :“Restoration MCO” : மலேசியாவில் மீட்சிக்கான இயக்கக் கட்டுப்பாடு இவ்வாண்டு இறுதி வரை நீட்டிப்பு..!
மேலும் இன்று மட்டும் 10 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 9048 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.9 சதவிகிதமாக ஆக உள்ளது.
Kenyataan Akhbar KPK 30 Ogos 2020 – Situasi Semasa Jangkitan Penyakit Coronavirus 2019 (COVID-19) di Malaysia https://t.co/Gwndo06oBB
— Noor Hisham Abdullah (@DGHisham) August 30, 2020
மேலும் துரதிஷ்டவசமாக வெகு நாட்கள் கழித்து 75 வயது முதியவர் ஒருவர் இன்று மலேசியாவில் கொரோனா காரணமாக இறந்துள்ளார். இதனால் கொரோனவால் மலேசியாவில் இறந்தவர்களின் எண்னிக்கை 126ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 17 பேரில் 15 பேர் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 12 பேர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அவர்கள் தனிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Telegram – https://t.me/malaysiatms