கடந்த சில நாட்களாக மலேசியாவில் 40-க்கும் குறைவாகவே கொரோனவால் புதிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மலேசியாவில் பாதிப்புக்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 105 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 6176 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று மட்டும் 116 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 4326 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்தி உள்ளது.
மேலும் கொரோனா காரணமாக நேற்று யாரும் மரணிக்காத நிலையில் மலேசியாவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 103 ஆக உள்ளது.
நேற்று 105 பேர் புதிதாக கொரோனாவால் பாதித்த நிலையில், இதில் வெளிநாட்டில் இருந்து வந்த பாதிப்புகள் 11 என்று மீதமுள்ள 94 பேரும் உள்ளூரில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.